புதுதில்லி, மே 2 - கொரோனா தொற்றுப் பாதிப்பை தவிர்க்கும் வகையில், 2021 ஜனவரி 16 முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் 2 டோஸ் தடுப்பூசியுடன், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள் ளது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறார் களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு கிறது. இதன்படி இதுவரை 189 கோடியே 43 லட்சம் டோஸ்கள் கொரோ னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி யை செலுத்திக் கொள்ளவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அர சியல் சாசன பிரிவு 21-இன் கீழ் தடுப்பூசி யை கட்டாயம் செலுத்திக்கொள்ள எந்த வொரு தனி நபரையும் கட்டாயப் படுத்த முடியாது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், “தடுப்பூசி போடாத வர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்பது போன்ற உத்தர வுகளை திரும்பப் பெற வேண்டும்” என்றும் மாநில அரசுகளுக்கு அறி வுறுத்தியுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விஷயத்தில், நிபந்தனைகளை உருவாக்கவும், கொள்கைகளை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.