அமித்ஷாவுக்கு 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கண்டனம்
புதுதில்லி, மே 9 - கர்நாடகத்தில் இஸ்லாமி யர்க்கான 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை நீதி மன்றம் விசாரித்து வரும், அது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது வெளி யில் எவ்வாறு கருத்து தெரிவிக்க லாம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இடஒதுக்கீட்டு விவ காரத்தை அரசியலாக்க அனுமதிக்க முடியாது எனவும் அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது. கர்நாடகத்தில் இஸ்லாமியர் களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கப் பட்டு வந்தது. ஆனால், அம்மாநில பாஜக அரசானது, திடீரென அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும், இஸ்லாமியர்களுக்கு வழங் கப்பட்டு வந்த 4 சதவிகிதத்தை, சட்ட மன்றத் தேர்தல் ஆதாயத்திற்காக, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங் களுக்கு தலா 2 சதவிகிதம் என்ற வகையில் பிரித்துக் கொடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமியரின் இடஒதுக் கீட்டைப் பறித்து எங்களுக்கு வழங்கு வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று லிங்காயத் பிரிவினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேர வைத் தேர்தல் முடியும் வரை, இஸ்லாமியர்க்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல் படுத்தக் கூடாது என கர்நாடகா அர சுக்கு உத்தரவிட்டது. கர்நாடகா அர சும் மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
ஆனால், கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்றும் தொடர்ந்து பேசி வந்தார். உச்ச நீதிமன்ற நிலுவை யில் இருக்கும் ஒரு விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவரே கருத்து தெரிவிப்பது, விசாரணையில் தலையிடுவது ஆகும் என்பதால் இதற்கு கண்டனம் எழுந்தது. இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு செவ்வா யன்று நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா, நீதிபதி அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போதும், இதுதொடர்பாக சுட்டிக் காட்டப்பட்டது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி னார். “4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்று இந்திய சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். ஆனால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை திரும்பப் பெறப் பட்டு விட்டதாக கூறியிருக்கிறார். நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளிக்கப்பட்டும் இதுபோன்ற அறிக் கைகளை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” என்று தவே குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி பி.வி. நாகரத்னா, “நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் முன் இருக்கும் போது, எவ்வாறு ஒரு வர் இப்படி கூற முடியும்? என்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அந்த அறிக்கையின் (அமித்ஷா வின் பேச்சு) உள்ளடக்கம் மற்றும் சூழல் குறித்து இங்கே கூறப்பட வில்லை என்று சமாளித்தார். “முஸ் லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புக்கு எதி ரானது என்றும் அதை பாஜக நீக்கி விட்டதாகவும் அமித் ஷா கூறினாரா இல்லையா?” என்று தவே கேள்வி யை முன்வைத்தார். அதற்கு, “யாரா வது, தாங்கள் மத அடிப்படையி லான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வர்கள் என்று கூறினால், அது முற்றி லும் நியாயமானதுதான்” என்று துஷார் மேத்தா, அமித்ஷா பேச்சை நியாயப்படுத்தும் வேலையில் இறங்கினார். இந்தமுறை நீதிபதி கே.எம். ஜோசப் குறுக்கிட்டார். அவர், “1971- ஆம் ஆண்டில், மேற்கு வங்க முதல்வர் நீதிமன்றத்தின் விசார ணையில் இருந்த ரேஷனிங் உத்தர வைப் பாதுகாக்க பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காக அவ மதிப்பு குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார்” என்பதை சொலிசிட்டர் ஜெனரலுக்கு நினைவுபடுத்தினார். இந்த அடிப்படையில் அமித்ஷாவை யும் கைது செய்ய முடியும் என்பதை மறைமுகமாக கே.எம். ஜோசப் சுட்டிக் காட்டினார்.
இதனால் சற்றுப் பின்வாங்கிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதிமன்றத்தின் உணர்வை தாம் புரிந்து கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, “ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், மத அடிப்படை யிலான இடஒதுக்கீடு அரசியல மைப்பிற்கு முரணானது என்று நான் கூறுகிறேன்” என்றார். அதற்கு “நீங்கள்தான் சொலி சிட்டர் ஜெனரல், நீங்கள் இந்த வழக் கில் ஆஜராகிறீர்கள். திறந்த நீதி மன்றத்தில் நீங்கள் அந்த அறிக்கை யை வெளியிடலாம், ஆனால் பொது இடத்தில் உள்ள மேடையில் இருந்து வேறு யாரோ ஒரு அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் வேறு பட்டது. உங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி ஒரு கருத்து இருக்கலாம், ஆனால் அதை இந்த முறையில் அரசியலாக்க அனுமதிக்க முடி யாது...” என நீதிபதி கேம். ஜோசப் தெரிவித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞ ரான துஷ்யந்த் தவே, ஒருபடி மேலே சென்று, “இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு மத அடிப்படையிலானதே அல்ல!” என்று சொலிசிட்டர் ஜெனரலுக்கு பதிலடி கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கள், ஜூலை 25-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை, இஸ் லாமியர்க்கான 4 சதவிகித இடஒதுக் கீடு ரத்து அமலாகாது என்று உத்த ரவு தொடரும் என்றும் அறிவித்த னர்.