புதுதில்லி, நவ.5- நாட்டில் ஹைதராபாத், தில்லி, பெங்க ளூரு, பூனே, போபால், கொல்கத்தா, குவ ஹாத்தி ஆகிய ஏழு இடங்களிலும் இருந்து வரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மண்டல அலுவலகங்களை மூடுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதற்கு, அகில இந்திய பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கண்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அருண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மண்டல அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மானி யக்குழுவின் அலுவலகங்களை ஒன்றிய அரசாங்கத்தின் உத்தரவின்படி மூடிவிட முடிவு செய்திருப்பது மிகவும் வருந்தத்தக் கது, ஜனநாயக விரோதமானது, துர திர்ஷ்டவசமானதாகும். இந்த மண்டல அள விலான அலுவலகங்கள் அந்தப் பகுதியில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல் லூரிகளைக் கூர்ந்து ஆய்வு செய்து தர மான கல்வியை அளிப்பதற்கு சேவை செய்து வந்தவைகளாகும். அப்பகுதி களில் பணியாற்றி வந்த ஆசிரியர்களும் புதுதில்லிக்குச் செல்லாமல் இதன் மூலம் பயன் அடைந்து வந்தார்கள்.
தேசிய அளவில் செயல்படும் பல்க லைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, இந்திய வேளாண்மை ஆய்வுக் கவுன்சில் போன்ற வற்றையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கை யின் தொடக்கமாகவே ஒன்றிய அரசாங்கம் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை யை எடுத்திருக்கிறது. இது ஜனநாயக விரோத நடவடிக்கை மட்டுமல்ல, நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிரானதுமாகும். தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதற்கான முயற்சியுமாகும். நாட்டில் கல்வி கற்பிப்பதைக் காப் பாற்ற உறுதிபூண்டிருக்கும் அய்ஃபக்டோ, அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. இதனை உறுதியாக எதிர்த்திடும். இவ்வாறு மண்டல அலுவலகங்கள் மூடப்படுவதன்மூலம் ஏற்படும் பாதிப்பு களை அரசு உணர்ந்து, மூடும் முடிவினை மறுபரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு பேராசிரியர்அருண்குமார்அறிக்கையில் கூறியுள்ளார். (ந.நி.)