கேரள அரசின் வாக்குறுதி களைக் கடந்து நிறை வேற்றப்பட்ட திட்டங்க ளின் சாதனைகளை விளக்கும் மூன்றாண்டு முன்னேற்ற அறிக்கை யினை அம்மாநில முதல்வர் பின ராயி விஜயன் தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 900 உறுதிமொழிகள் மீது இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்த முன்னேற்ற அறிக்கை யில்,” பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனதா பஸ், குடும்ப ஸ்ரீ உணவு பெட்டி, பயிர் காப்பீடு, சோலார் சிட்டி திட்டம், ஸ்மார்ட் டிராவல் கார்டு உள்ளிட்ட 28 திட்டங்களை கேரள அரசு செயல் படுத்தியது. குறிப்பாக வாக்குறுதி களில் லைப் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றரை லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2016 முதல் நான்கு லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடலோர - மலைப்பாதைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு கிறது. பணம் செலுத்தி நிலத்தை கையகப்படுத்தும் மாபெரும் பொறுப்பை கேரள இடது முன் னணி அரசு நிறைவேற்றியுள்ளது. இரண்டு லட்சம் நிறுவனங்கள் மூலம் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பணியாளர் தேர்வாணையம் (பிஎஸ்சி) மூலம் இந்த ஆண்டில் 37,124 பேர் நியமிக்கப்பட்டனர். கடும் கோடையிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக கேரளம் மாறி யுள்ளது. அரை லட்சம் பிபிஎல் குடும்பங்களுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கள் வழங்கப்பட்டன. தீவிர வறு மையை ஒழிக்கும் திட்டத்தில் பெரும் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. அடையாளம் காணப் பட்ட 64,006 பேரில் பாதி பேர் தீவிர வறுமையிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளனர். சமூக நலன் மற்றும் அடிப்படை வசதி கள் மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கம் 900 வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளில் முடிக்கும் பெரிய திட்டங்களையும், விரைவாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை யும் வகைப்படுத்தி, முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்டு விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
நல ஓய்வூதியம் நிறுத்தப்படாது
அரசு ஊழியர்களின் டிஏ நிலு வைத் தொகை உடனடியாக வழங்கப்படும். நலத்திட்ட ஓய்வூதி யங்கள் காலதாமதமின்றி வழங்கப் படும். ஒன்றிய அரசால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் சில விசயங்கள் தடைபட்டாலும் சம்பளம் நிறுத்தப்படவில்லை. தகுதியான டிஏவை சரியாக வழங்க முடிய வில்லை. அந்த சிரமம் என்றென்றும் நீடிக்காது. விரைவில் சரி செய்து தரப்படும். ஓய்வூதிய டிஆர் (பஞ்ச நிவாரணம்) விரைவில் வழங்கப் படும். சமூக நல ஓய்வூதியம் நிறுத்தப்படாமல் இருக்க ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. ஓய்வூதிய நிறுவனத்தின் கடனை அரசின் கடன் வரம்புக்குள் வைத்து ஓய்வூதியத்தை முடக்க ஒன்றிய அரசு முயற்சித்தது. சில மாதங்க ளாக ஓய்வூதியம் சரியாகச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் தற்காலிக நிவாரணம் கிடைத்தது. நீதிமன்றத் தலை யீட்டால் நிதி நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டபோது, ஓய்வூதி யம் சரியாக வழங்கப்பட்டது. ஓய்வூதியம் முடங்கும் என்று யாரும் நினைக்க வேண்டிய தில்லை. நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும். முன்னேற்ற அறிக்கை மூலம் அரசாங்கத்தை மதிப்பிடும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கிறது. மக்கள் விரும்பும் அளவுக்கு நிர்வா கத் துறையை உயர்த்த முடிந்துள் ்ளது. கடந்த அரசாங்கம் பல சிரமங்க ளுக்கு மத்தியில் செயல்பட்டது. பேரிடர் சூழ்நிலையில் உதவி தேவைப் பட்டவர்களால் முன்னேற முடியவில்லை. தொடர் ஆட்சி ஏற்பட்டதும், இயற்கை பேரிடர்களை விட கடுமையான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வேறு எந்த மாநிலமும் இதுபோன்ற கொ டூரத்தை சந்தித்ததில்லை. உரிய பங்கு வழங்காத மனப்பான்மை நீதிமன்றத்தை அணுகி சரி செய்யப்பட்டது. சிறந்த வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் நவீன நிறு வனங்கள் கேரளத்தில் உருவாகும். வறட்சி காலத்தில் ஏற்பட்ட விவ சாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கடற்கரையோர பிரச்சனைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீடு எதுவும் இல்லை. இந்தத் துறையில் சில விசயங்களைச் செய்ய வேண்டி யுள்ளது. மனித - வனவிலங்கு மோதலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரிடம் கருத்து தெரிவிக்க…
எல்டிஎப் அரசாங்கத்தின் முன்னேற்ற அறிக்கையை ஆன் லைனில் படித்து முதல்வரிடம் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லை னிலும் தபால் மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம். தபால் அல்லது நேரில் செல்ல முகவரி: முதலமைச்சர், 3ஆவது தளம், வடக்குத் தொகுதி, அரசு. செயல கம், திருவனந்தபுரம். 695001. ஆன்லைன் மூலம் தெரிவிக்க இணையதளம்: www.keralacm.gov.in.