சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மேயர் பிரியா பேசுகை யில், ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல 5 நிமிடங்கள் ஆகும். எந்த பணி நடந்தா லும் தகவல் தெரிவியுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், கவுன்சிலர்களுக்கு தகவல் தெரி விப்பதில் அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம், ஆய்வு பணிகள், வளர்ச்சி பணிகள், எது நடந்தாலும் கட்டாயம் கவுன்சிலர் களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.