states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்முதாபாத் நம் நாட்டில் ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற மதிப்புகளை உயர்த்துபவராக அறியப்படுகிறார். அவர் வெறுப்பை விதைப்பவரோ அல்லது சமூக கலவரத்தை தூண்டுபவரோ அல்ல. ஆனால்  அவரை ஹரியானா பாஜக காவல்துறை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

ஆடம்பரமாக படம் காட்டுவதற்கு வெளியுறவு கொள்கையை பாஜக பயன்படுத்துவதை உலக நாடுகள் ரசிக்கவில்லை. இந்தியாவை டிரம்ப் ஆதரிக்காதது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் வலியுறுத்தலையும் பொருட்படுத்தாமல், பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரே தன்மை கொண்ட நாடுகள் போல அவர் பேசி இருக்கிறார். ஜி7 நாடுகள் கூட இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை.

சமாஜ்வாதி மூத்த தலைவர் அப்பாஸ் ஹைதர்

பேராசிரியர் மஹ்முதாபாத் மிகவும் எளிய மனிதர்;  படித்தவர். அவரது சமூக ஊடக பதிவில் அரசாங் கத்தைப் பாராட்டியதோடு, நாட்டில் இரட்டை நடைமுறைகள் உள்ளதா? என கேள்வியையும் எழுப்பியிருந்தார். அவரைக் கைது செய்வதன் மூலம், பாஜக அரசு நாட்டில் இரட்டை நடை முறைகள் உள்ளன என்பதை நிரூபித்துவிட்டது.

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்

பாகிஸ்தானுக்கு உதவியதாக ஹரியா னாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல் ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு உளவாளிக்கு மதம் இருக்காது. தவறான செயலில் ஈடுபடும் அனைவர் மீது  அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்