காந்தி நகர், ஜூன் 3 - புத்தாடையும், கூலிங் கிளாஸூம் அணிந்ததற்காக, குஜராத்தில் தலித் இளைஞர் ஒருவர், சாதிவெறி யர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரது தாயாரையும் அந்தக் கும்பல் தாக்கி யதுடன், உடைகளை கிழித்தெறிந்து அவமானப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் பாலன்பூர் தாலுகாவிற்கு உட்பட்டது மோட்டா என்ற கிராம மாகும். இங்கு, ஜிகர் ஷெகாலியா என்ற தலித் இளைஞர், கடந்த செவ்வாய்க் கிழமையன்று காலை புத்தாண்டை யும், கூலிங் கிளாஸூம் அணிந்தபடி, அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்புத் என்ற ஆதிக்க சாதிப்பிரிவைச் சேர்ந்த நபர் ஜிகர் ஷெகாலியாவைப் பார்த்து, ‘இப் போதெல்லாம் நீங்கள் தலைகால் புரி யாமல் ரொம்ப ஆடுகிறீர்கள் இல் லையா... இருங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர், அன்று இரவு ஜிகர் ஷெகாலியா, அங்குள்ள கோயில் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட ராஜ்புத் சாதிவெறிக் கும்பல், ஜிகர் ஷெகாலியாவை திடீரென சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். “தலித் வகுப்பைச் சேர்ந்த நீ, இனிமேல் புத்தாடையும், கண்கண் ணாடியும் அணிந்து கொண்டு எங்கள் முன் வருவாயா?” என்று கேட்டுக் கொண்டே இளைஞர் ஷெகாலியாவை அடித்து, அருகிலுள்ள பால் பண்ணை யின் பின்பக்கத்திற்குத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது, தனது மகன் தாக்கப்படு வதை அறிந்த ஜிகர் ஷெகாலியாவின் தாய், எனது மகனை விட்டுவிடுங்கள் என்று கதறித் துடித்தபடியே பின்னால் ஓடியுள்ளார். அப்போது, சாதிவெறிக் கும்பலானது, ஜிகரின் தாயாரையும் தாக்கியதுடன், ஜிகர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரின் உடைகளை யும் கிழித்து அவமானப்படுத்தியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட தலித் இளை ஞரும், அவரது தாயாரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிகர் ஷெகாலியா அளித்த புகா ரின்பேரில், தற்போது 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ், கலவரம், சட்டவிரோத கூட்டம், பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான வார்த்தைகளைப் பயன் படுத்துதல் மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடு மைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. எனினும், அவர்கள் யாரும் உட னடியாக கைது செய்யப்படவில்லை.