states

img

“இந்தியா” கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு பாஜக மிரட்டுகிறது

மோடியின் பாஜக அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந்தியா” கூட்ட ணியில் தற்போது தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட எழுச்சியான “இந்தியா” கூட்டணி யை கண்டு மிரண்ட பாஜக, பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற் றியது. அதாவது பாரத ரத்னா விருது வழங்கல், மாநிலங்களவை எம்பி பதவி, மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டல் ஆகியவற்றின் மூலம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் வளைத்தது. “இந்தியா” கூட்டணி யில் உள்ள 28 கட்சிகளில் வெறும் 2 கட்சிகள் (ஐக்கிய ஜனதாதளம், ஆர்எல்டி) மட்டுமே பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து ஓடிய நிலை யில், மற்ற 26 கட்சிகள் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள் என்று  தொகுதிப் பங்கீடு வேலையில் தீவிரமாகிவிட்டன. உத்தரப்பிர தேசம், தில்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான “இந்தியா” கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் கலங்கிப்போயுள்ள பாஜக, “இந்தியா” கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறாவிட்டால் கலால் கொள்கை வழக்கின் 8- ஆவது சம்மன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்வோம் என நேரடியாக மிரட்டியுள்ளது.  இதுதொடர்பாக ஆம் ஆத்மி  மூத்த தலைவரும், தில்லி அமைச்ச ருமான சவுரப் பரத்வாஜ் கூறுகை யில், “இந்தியா” கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என  பாஜக மிரட்டி வருகிறது. நாட்டுக்காக கூட்டணியில் இணைந்துள்ளோம்; கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யட்டும். இன்னும் 2-3 நாட்களில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவார். அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐ-யும் அவரை கைது செய்ய நட வடிக்கை எடுத்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது” என அவர் கூறினார்.

தில்லியில் பதற்றம்

கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என தொடர்ந்து தகவல் வெளியாவதால் தில்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காரணம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் ஆம் ஆத்மி  கட்சி, பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லி யில் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதால், காங்கிரஸ் கட்சி யும்  ஆம் ஆத்மியுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி யுள்ளது. எல்லைக்கு வெளியே விவ சாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தில்லியில் போரா ட்டம் நடத்த “இந்தியா” கூட்டணி திட்டமிட்டுள்ளதால் என்ன செய்வது என்று பாஜக கூடுதல் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.