புதுதில்லி, ஆக. 17 - தில்லி சட்டப்பேரவை யில் மணிப்பூர் விவகாரம் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய நிலை யில், அவருக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மணிப்பூரில் பாஜக பற்றவைத்த இனவாத நெருப்பு காரணமாக, அங்கு இரண்டு சமூகமக்கள் இடை யே வன்முறை வெடித்து, மாநிலமே கலவரக்காடாக மாறியிருக்கிறது. இது குறித்து, தில்லி சட்டப்பேர வையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்தார். அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏ-க்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசக் கூடாது; தில்லியில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே பேச வேண்டும் என்றும் கூச்சல் மற்றும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக சட்டப்பேரவை உறுப் பினர்கள் 4 பேரை, அவைக் காவலர்கள் வெளியேற்றி னர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, பாஜக எம்எல்ஏக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.