மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக் குண்டர்களின் ஊழல் வழக்கு மற்றும் சந்தேஷ்காளி கிராமத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவங்களை பிரதமர் மோடி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசு மூலம் தீர்த்து வைத்தார் என்ற பிம்பத்தின் மூலம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முக்கியமாக பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கி இழிவான அரசியல் ஆதாயமும் தேடியுள்ளது. இவற்றுக்கு இடையில் வழக்கம் போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் பார்முலாவான தேர்தல் கால வன்முறையையும் கடைபிடிக்க மக்களவை தேர்தலில் குண்டர்களை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக. “இந்தியா” கூட்டணியில் இருந்தாலும் மாநில அரசியல் என்ற ஒற்றை அர்த்தத்தில் தனித்து போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வன்முறை மூலம் மக்களவை தொகுதியில் ஆதிக்கம் செலுத்தவும் முயன்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் - பாஜகவின் நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி அகிம்சை வழியில் எளிதான மக்கள் சந்திப்பு மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எங்களுக்கு வன்முறை தேவையில்லை அமைதியான அரசியலே எங்களுக்கு போதும் என மேற்கு வங்க மக்கள் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர்.