states

img

அழகான மேம்பாலத் தூண்களால் போக்குவரத்துச் சிக்கல் தீராது

காஷ்மீரின் கோடைக்  காலத் தலைநகரான ஸ்ரீநகரில் போக்குவரத்து மேலாண்மை தனக்கு  ஏமாற்றத்தை ஏற்படுத்தி யிருப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சியின்  துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். “இன்றைய நாட்களில் ஸ்ரீநகர் நகரின் மிகப்பெரிய பிரச்ச னைகளில் ஒன்றாகப் போக்குவரத்து மேலாண்மை உள்ளது. அதனைத் தீர்க்க புதிய உள்கட்டமைப்பு எதுவும் உரு வாக்கப்படவில்லை. அழகான மேம்பாலத் தூண்களுக்கு ஓவியம் தீட்டுவதால் சாலை களில் குழப்பம் தீர்ந்துவிடாது” என்று அவர் கூறியுள்ளார்.