மணிப்பூரில் மீண்டும் அரசுப் பேருந்து சேவை காங்போக்பியில் பேருந்து மீது தாக்குதல்
குடியரசுத் தலைவர் ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூர் மாநி லத்தில் ஆயுதங்களை ஒப்ப டைப்பதன் மூலம் வன்முறை குறைந்து விட்டதாக எண்ணி வெள்ளிக்கிழமை முதல் அங்கு அரசுப் பேருந்து சேவை கள் தொடங்கப்பட்டன. மாவட்ட அளவிலான இண்டர்-டிஸ்ட்ரிக்ட் பேருந்துகள் மட்டும் இயக் கப்பட்டு வரும் சூழலில், செனாபதி மாவட்டத்தை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது சனிக்கிழமை அன்று காலை காங்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் பகுதியில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் பேருந்து நடத்து னர் மற்றும் சில பயணிகள் காயம டைந்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
குஜராத்தைச் சேர்ந்தவர்கள் சாதியை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க எம்.பி., குற்றச்சாட்டு
குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அமெ ரிக்காவில் சாதியை இறக்குமதி செய்கிறார்கள் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர் பாக அவர் மேலும் கூறுகையில், “அமெ ரிக்கா நாடு வளர்ந்த நிலையில் இருப்ப தற்கு காரணம், இங்கு சாதி அமைப்பு இல்லை. ஆனால் இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள சாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் மிக மோசமான அளவில் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் குஜ ராத் மாநிலத்தைச் சேர்ந்த “வியுவா படி தார் சமாஜ்” என்ற சாதிய அமைப்பின் பெயரில் அமெரிக்காவில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடுவதற்காக நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இது அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு நல்ல தல்ல”என பிராண்டன் கில் குற்றம் சாட்டினார்.
அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாட்டின் முக்கிய ரயில் சேவைக ளில் ஒன்றான அயோத்தி எக்ஸ் பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால், தில்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில்,”தில்லி - அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-8 (S -8) பயணிகள் பெட்டியின் கழிப்பிட அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள் ளது. அந்த ரயில் லக்னோவின் சர்பாக் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பு வெடிக்கும்” என அதில் கூறப் பட்டுள்ளது. உடனே உத்தரப்பிரதேச காவல் துறை, ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க அயோத்தி எக்ஸ் பிரஸ் ரயில் பாராபங்கி ரயில் நிலை யத்தில் (உ.பி.,) நிறுத்தப்பட்டது. ரயில்வே காவல்துறையினர், ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால் சந்தேகத்திற்கிடமான பொ ருட்கள் எதுவும் கிடைக்காததால் சுமார் 2 மணி நேர சோதனைக்கு பிறகு அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தில்லிக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றது.