states

ஈரான் பெண்கள் போராட்டம் வெற்றி

புதுதில்லி, டிச.7- ஹிஜாப் ஒழுங்காக அணியவில்லை என்று ஈரான் ‘கலாச்சாரக் காவலர்களால்’ (Moral Police), மாஷா அமினி என்னும் 22 வயது இளம்பெண், கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஈரானில் நடைபெற்றுவந்த பெண்களின் வீரஞ் செறிந்த போராட்டம் வெற்றி பெற்றதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஹிஜாப் ஒழுங்காக அணியவில்லை என்று ஈரான் அறநெறிக் காவல்துறையி னரால் இளம்பெண் கொலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் பெண் கள் அனைவருமே தங்கள் ஹிஜாப்புகளை எரித்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரி வித்தனர். தங்கள் தலைமுடியையும் வெட்டி எறிந்தனர். ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக, பெண்கள் நடத்தி வரும் வீரமிகு போராட்டத்திற்கு, ஈரான் முற்போக்கு அறிவுஜீவிகள், மாண வர்கள், கலைஞர்கள் மற்றும் குடிமக்களும் ஆதரவு அளித்தனர்.

உடைகள் அணிவதும், பொது இடங்க ளில் சுதந்திரமாக உலவுவதும் பெண்களின் உரிமை என்று ஈரான் பெண்கள் நடத்தி  வந்த ஒன்றுபட்ட போராட்டம் ஈரானிய ஆட்சி யாளர்களை, கலாச்சாரக் காவல்துறை அமைப்பையே விலக்கிக்கொள்ள வைத்தது. ஈரான் அட்டார்னி-ஜெனரல், அற நெறிக் காவல்துறை, நாட்டில் நீதித்துறை யின் ஓர் அங்கம் அல்ல என்று அறிவித்தார். இவ்வாறு ‘ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமக்கு சுயாட்சியை அளித்திடும், சமத்து வத்தை அளித்திடும்’ என்பதற்கு ஈரான் பெண் கள் தங்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் ஒளிவீசும் எடுத்துக்காட்டாக விளங்கு கின்றனர்.   இது ஈரான் பெண்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் ஒடுக்குமுறையாலும், பல மதங்களிலும் பல வடிவங்களில் பெண்களு க்கு எதிராக  அமைந்துள்ள மதவெறித் தீவிர வாதத்திற்கு எதிராகவும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். மதத்தின் பெய ரால் பெண்களின் உரிமைகளை நசுக்கிட உலகம் முழுதும் ஆட்சி செய்துவரும் எதேச்ச திகார அரசாங்கங்கள் அனைத்திற்கும் இது ஒரு பாடமாகும்.   போராட்டத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கி றது. இப்போது அறநெறிக் காவல்துறை நீக் கப்பட்டுவிட்டதன் காரணமாக, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத் தையும் திரும்பப்பெறும் என்றும், அவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து விடுதலை செய்திடும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் தெரிவித் துள்ளது.