அந்தமான் வான்வெளி மூடல் ஏவுகணை சோதனை
வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மே 23, 24ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் ஏவுகணை சோதனை மற்றும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மே 16ஆம் தேதி இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை (மே 23) காலை முதல் இந்திய விமானப்படை ராணுவ பயிற்சியை தொடங்கியது. பயிற்சி நடைபெறும் தருணங்களில், அதாவது இரண்டு நாட்களிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் அந்தமான் வான்வெளியை மூட விமானப்படை வீரர்களுக்கான அறி விப்பு மையம் (NOTAM) உத்தரவிட்டுள் ளது. இதனால் அந்தமான் வான்வெளி வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்களில் 6 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும். காலை 7 மணி முதல் 10 மணி வரை தவிர மற்ற நேரங்களில் அந்தமான் வான்வெளி எப்பொழுதும் போல விமான சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.