அதானியின் பங்குச் சந்தை ஊழல் விவகாரத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மீதும் வழக்கறிஞர் அனாமிகா ஜெய்ஸ்வால் புகார்களை எழுப்பியுள்ளார்.
ஸ் டேட் பாங்க் ஆப் இந்தியா வின் முன்னாள் தலைவர் ஓ.பி.பட், மும்பை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி. தேவதர், பிரிக்ஸ் நாடு களின் புதிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர் கே.வி. காமத், இன்போசிஸின் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி மற்றும் பங்கு பத்திர நிபுணர் மற்றும் வழக்கறி ஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகி யோர் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களில் ஓ.பி. பட், ஜே.பி. தேவதர், கே.வி. காமத், சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் அதானி மற்றும் அதானி குழு மத்தோடு தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் எந்தெந்த வகை களில் தொடர்பு கொண்டவர்கள் என்பதையும் ஆதாரங்களுடன் அனாமிகா ஜெய்ஸ்வால் வெளி யிட்டுள்ளார்.
அனாமிகா ஜெய்ஸ்வால் புதிய மனு
இதுதொடர்பாக, தனது வழக்க றிஞர் ரமேஷ் குமார் மிஸ்ரா மூலம், கடந்த செப்டம்பர் 18 அன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை, ஜெய்ஸ்வால் தாக்கல் செய்துள் ளார். அதில், அதானிக்கு நெருக்க மான வல்லுநர் குழுவை நீக்கி விட்டு, புதிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
கிரீன்கோ தலைவர் ஓ.பி. பட்
‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வின் முன்னாள் சேர்மனான ஓ.பி. பட், தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ வின் (Greenko) சேர்மனாக இருந்து வருகிறார். இந்த ‘கிரீன்கோ’ நிறு வனமும், அதானி குழுமமும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலில் 2022 மார்ச் முதல் நெருங்கிய கூட்டு றவைக் கொண்டுள்ளன. இவர்க ளது கூட்டணி குறித்து 14.03.2022 அன்று அதிகாரப்பூர்வ அறிக்கை யும் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், பொதுத்துறை வங்கி களில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடன்வாங்கி திருப்பிச் செலுத்தா மல், வெளிநாட்டுக்குத் தப்பியவ ரான விஜய் மல்லையாவுக்கு எஸ்பிஐ வங்கி 1.2 பில்லியன் டாலர் முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர்தான் ஓ.பி. பட். 2006 முதல் 2011 வரை ஓ.பி. பட் சேர்மனாக இருந்த காலக் கட்டத்தில்தான் எஸ்பிஐ வங்கி, விஜய் மல்லையாவுக்கு அதிகப்படி யான கடன்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்டவர்தான் அதா னிக்கு எதிரான விவகாரத்தில் உண்மையை கண்டறியும் வல்லு நர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ முன்னாள் நிர்வாகி கே.வி.காமத்
அதேபோல ஐசிஐசிஐ வங்கி 2009 முதல் 2018 வரையில் வீடியோ கான் குரூப்-க்கு அளித்த கடன் அனைத்தும், செயல்படாத கடன் களாக - வராக்கடன்களாக மாறியது. இதுதொடர்பாக வங்கி யின் சேர்மனாக இருந்த சந்தா கோச்சார் குற்றம் சாட்டப்பட்டார். வீடியோகான் குழுமத்திற்கு வழங் கப்பட்ட கடன்களுக்கு ஈடாக கோச்சாரும், அவரது குடும்பத்தின ரும் ‘பரிசுகளை’ பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த கடன்களில் சிலவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நேரத்தில் (2009-இல்) கே.வி. காமத் வங்கியின் நிர் வாகமற்ற தலைவராக (Non-Executive) இருந்தார் என்பதுடன், வீடியோகான் குழுமத்திற்கு கடன் அனுமதி குழுவில் உறுப்பின ராகவும் இருந்தார். இதற்காக கே.வி. காமத் மீது முதல் தகவல் அறிக்கையும் உள்ளது. அதானிக்கு ஆஜராகும் சோமசேகர் சுந்தரேசன் இதேபோல் ‘செக்யூரிட்டீஸ்’ வழக்கறிஞர் சோமசேகர் சுந்த ரேசன் அதானி குழுமத்திற்காகவே பல முறை ‘செபி’ நிர்வாகக் குழு முன்பு ஆஜராகி வாதாடியுள்ளார். எனவே, மோசடி புகாருக்கு உள்ளானவர்களை வல்லுநர் குழுவில் இருந்து நீக்கிவிட்டு, அதானி குழுமத்திற்கு எவ்வித மான தொடர்பும் இல்லாத நிதியி யல், சட்டம், பங்குச்சந்தை துறை யில் இருக்கும் வல்லுநர்களை சரி யாக தேர்வு செய்து புதிய குழுவை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம், இந்த மனு வை அக்டோபர் 13 அன்று விசா ரிக்கும் என தெரிகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் போன்றவற்றால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நஷ் டம் அடைந்த நிலையில், இதில், முன்னெச்சரிக்கையாக பங்குச்சந் தையை நிலைப்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம்?; இந்த விஷயத்தில், பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்வ தற்காகவே வல்லுநர் குழுவை, உச்சநீதிமன்றம் தானே முன்னின்று அமைத்தது குறிப்பிடத்தக்கது.
அதானிக்கு ஆஜராகும் சோமசேகர் சுந்தரேசன்
இதேபோல் ‘செக்யூரிட்டீஸ்’ வழக்கறிஞர் சோமசேகர் சுந்த ரேசன் அதானி குழுமத்திற்காகவே பல முறை ‘செபி’ நிர்வாகக் குழு முன்பு ஆஜராகி வாதாடியுள்ளார். எனவே, மோசடி புகாருக்கு உள்ளானவர்களை வல்லுநர் குழுவில் இருந்து நீக்கிவிட்டு, அதானி குழுமத்திற்கு எவ்வித மான தொடர்பும் இல்லாத நிதியி யல், சட்டம், பங்குச்சந்தை துறை யில் இருக்கும் வல்லுநர்களை சரி யாக தேர்வு செய்து புதிய குழுவை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம், இந்த மனு வை அக்டோபர் 13 அன்று விசா ரிக்கும் என தெரிகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் போன்றவற்றால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நஷ் டம் அடைந்த நிலையில், இதில், முன்னெச்சரிக்கையாக பங்குச்சந் தையை நிலைப்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம்?; இந்த விஷயத்தில், பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்வ தற்காகவே வல்லுநர் குழுவை, உச்சநீதிமன்றம் தானே முன்னின்று அமைத்தது குறிப்பிடத்தக்கது.