states

img

மோடி ஆட்சியில் ஆயிரம் ரூபாயைத் தாண்டியது கேஸ் விலை!

புதுதில்லி, மே 7- இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சமையல் எரிவாயு முதன்முறையாக ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டிற்கான ஒரு  எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்து 15 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த மே 1 அன்று வர்த்தகப் பயன்  பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மட்டுமே மோடி அரசு உயர்த்தி இருந்தது. 19 கிலோ வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்ட ரின் விலை, ஒரேநாளில் 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டதன் காரண மாக, அதன் விலை 2 ஆயிரத்து 355 ரூபாயாக அதிகரித்தது.

இது தலைநகர் தில்லியின் விலை எனில், சென்னையிலோ வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை  2 ஆயிரத்து 508 ரூபாயாக உயர்ந்தது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மார்ச்  மாதத்திற்கு பிறகு 2 மாதமாக உயர்த் தப்படாமல் இருந்து வந்தது. அதன் விலை 965 ரூபாய் 50 காசுகளாக இருந்து வந்தது.  இந்நிலையில், சனிக்கிழமை யன்று வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையையும் மோடி அரசு சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, இந்திய வர லாற்றில் முதன்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஆயி ரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றிலடித்த முதல் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.

கடந்த 2021 ஜனவரியில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 710 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக அதிக ரிக்கப்பட்டு, கடந்த 2021 அக்டோபர் 6-ஆம் தேதி 915 ரூபாய் 50 காசு கள் என்ற அளவிற்கு கொண்டு செல்  லப்பட்டது. அதன் பின்னர், 2022  மார்ச்சிலும் 50 ரூபாய் உயர்த்தப்படவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 965 ரூபாய் 50 காசுகளாக அதிகரித் தது. தற்போது மேலும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சிலிண்டர் ஒன்றின் விலை  1015 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 315 ரூபாயும், 2022-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 100 ரூபாயும் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.

சமையல் எரிவாயு விலை, முந்  தைய மாதத்தின் சர்வதேசச் சந்தை  விலை அடிப்படையிலேயே நிர்ண யம் செய்யப்படுகிறது. அந்த வகை யில்தான் தற்போதும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, சமையல் எரி வாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மோடி அரசு கடந்த 2 ஆண்டுகளில் ஏறக்குறைய ஒழித்துக் கட்டி விட்டது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத் தப்படும் சமையல் எரிவாயுவுக்கு, பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ், மானி யம் வழங்கப்பட்டு வந்தது. தான் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த மானி யத்தை நேரடி பணப்பரிமாற்றத் திட்டத் தின் கீழ், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவேன் என்று மோடி கூறினார். 

ஆனால், கடந்தாண்டு சந்தை விலைக்கும், மானிய சிலிண்டர் விலைக்கும் உள்ள இடைவெளி குறைந்து விட்டதாக கூறி, சுமார் 16 கோடி  எரிவாயு நுகர்வோருக்கு வழங்கி வந்த  மானியத்தை முற்றிலுமாக நிறுத்தியது. இதன்மூலம் 2021 நிதியாண்டில் இருந்து, ஏழை, நடுத்தர மக்களுக்கு செல்ல வேண்டிய 20 ஆயிரம் கோடி  ரூபாய்க்கும் மேலான தொகையை மிச்சப்படுத்தி, அதை வராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் பெருமுத லாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தது. 2021-22 நிதியாண்டில் ஒன்றிய பாஜக அரசு ரூ. 37 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சத்தை சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு மானியத்திற்காக ஒதுக்கியிருந்தது. ஆனால், கடந்த 2021-22 நிதியாண் டின் முதல் காலாண்டில் வெறும் 1,900 கோடி ரூபாயை மட்டுமே மானி யத்திற்காக செலவளித்தது.

பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் 8 கோடி பேருக்கு மட்டுமே பெயரளவில் கடந்தாண்டு மானியம் வழங்கப்பட்டது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு, சிலிண்டர் ஒன்றுக்கு சராசரியாக 300 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற் போது சிலிண்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.25 என்ற அளவிற்கே மானியம் ஒதுக்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ள நிலையில், மக்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி திரும்பும் நிலை உருவாகி யுள்ளது.