இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி இந்தி தான். இந்தி மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வது அனைவருக்கும் பலன் தரும். இந்தியைக் கற்றுக் கொள்வது பெரிய அளவில் உதவும். ஆனால் தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று யாரும் பிரச்சனை செய்வதில்லை என்று மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்களை குறை சொன்னதோடு, நடமாடும் இந்தி பிரச்சார சபாவாக மாறி இந்தி திணிப் புக்கு வக்காலத்து வாங்கி வந்த ஆளுநர் ரவி திடீரென தமிழ்மொழி மீது இந்தியை யாரும் திணிக்க முடியாது என்று பேசி உள்ளார். காசி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை அழைத்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு திடீர் ஞானோதயம் வந்தவர் போல பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆர்.என்.ரவி . அவருடைய தாய் மொழியான மராட்டிய மொழியையே இந்தி மொழி தின்று செரித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று தமிழை அழித்து செரிக்கமுடியவில்லை என்ற ஆதங் கம் அவருக்கு இருக்கக்கூடும்.
இப்போது சிஆர்பிஎப் காவலர்களுக்கான தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது இவரு டைய முதலாளியான ஒன்றியத்தை ஆளும் அரசு. அதுமட்டுமின்றி, அந்தத் தேர்வில் இந்தி தெரிந்தவர்களுக்கு கூடுதலாக 15 மதிப்பெண் கள் தரப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி னால் பிராந்திய மொழிகளில் இந்தத் தேர்வு ஒரு போதும் நடத்தப்பட்டதில்லை என்று பதில ளிக்கிறது ஒன்றிய அரசு. இப்போதாவது தவறை சரி செய்யுங்கள் என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார் சு.வெங்கடேசன். தமிழின் மீது தாளாத காதல் கொண்டவர் போல நடிக்கும் ஆளுநர் ரவி இத்தகைய மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பை ஏன் கண்டிக்க முன்வரவில்லை. இரண்டு மூன்று நாட்களாக ஆளுநர் மாளி கையை நோக்கி வீசப்படும் கண்டனக் கணை களும் சட்டப்பேரவை தீர்மானங்களும் அவ ரைக் கொஞ்சம் அசைத்திருக்கக் கூடும். ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டா வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய போதும் ஒப்புதல் அளிக்காமல் சண்டித்தனம் செய்து வந்தார் ஆளுநர். ஒப்புதல் அளிக்க வில்லை என்றால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என பொருள் என்று ஆணவத்தின் உச்சத்தில் நின்று கொக்கரித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநரின் ஆணவப் போக்கைக் கண்டித்து தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். கிண்டி மாளிகையின் கணக்கு வழக்குகளை கிண்டத்துவங்கினார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன். குறிப்பிட்ட காலவரையறைக்குள் சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்ட முன் வரைவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறை வேற்றுமாறு பாஜக அல்லாத அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் அடாவடியை எதிர்த்து அன்றாடம் போராடி வருகின்றன. இந்த நிலையில்தான், தமிழ் மொழியின் மீது இந்தியைத் திணிக்க முடியாது என திரு வாய் மலர்ந்துள்ளார் ஆளுநர் ரவி. அது மட்டுமின்றி, இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று கூறியுள்ளதோடு தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உண்டு என்று கூறியுள்ளார். தமிழ்நாடு என்று கூறக்கூடாது என்று கூறிய அதே திருவாய்தான் இப்போது தமிழ்நாட்டின் வரலாறு 3500 ஆண்டுகளுக்கும் முந்தையது என்று கூறுகிறது. இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராகவும் தமிழ்நாடு இருக்கிறது என்று தனது வழக்க மான சரடையும் விட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆன்மீகம் ஆளுநர் ரவி கூறும் ஆன்மீகம் அல்ல. அது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போதித்த பெருநெறி. எப்பொருள் யாய் யார்வாய் கேட்பினும் அப்பொருளில் மெய் பொருள் காணும் உயர்நெறி. அதனால்தான் ரவி வகையறாவின் பொய்ப்பொருளை இங்கு விற்க முடியவில்லை.
சமஸ்கிருதமும் பழமையான மொழிகளில் ஒன்று. இலக்கிய, இலக்கண செழுமை மிக்கது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது வழக்கொழிந்த மொழியாக குறு கிப் போனதற்கு காரணம் அதை வேத மொழி, மந்திர மொழி, தேவபாஷை என்றெல்லாம் கூறி உழைக்கும் மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியதால்தான். காசி தமிழ்ச்சங்கமத்தில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழும் சமஸ் கிருதமும் சிவபெருமானின் வாயிலிருந்து வந்த மொழிகள் என்று உளறிக் கொட்டினார். எந்தவொரு மொழியானாலும் அது மனித உழைப்பின் விளைச்சல்களில் ஒன்றுதான். நிறுவன மதங்கள் தோன்றுவதற்கு முன்பே மனிதர்கள் மொழிகளை உருவாக்கிவிட்டார் கள். அதை ஒரு குறிப்பிட்ட தெய்வத்தோடும், மதத்தோடும், சாதியோடும் முடிச்சுப்போடு வது அறிவியல் ஆகாது. இப்படிச் செய்த தால்தான் சமஸ்கிருத மொழி வழக்கொழிந்த மொழி என்ற வசையை சுமக்க நேர்ந்தது. ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்த பின்பும் தமிழ் இன்னமும் வாழ்வியல் மொழி யாக வாழ்கிறது. இப்போதும் கூட சமஸ்கிருத மொழியை வாழ்வியல் மொழியாக்க சனாதனிகள் தயா ராக இல்லை. சமஸ்கிருதம் வேதத்தை பாது காப்பதற்காகவே தோன்றிய மொழி. ஆதியில் சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அதற்கு வரி வடிவமும் இல்லை. அதை பரவலாக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது தெய்வ மொழி என்று கயிறு திரிக்கிறார் ஒரு சமஸ் கிருத பண்டிதர்.
இத்தகைய பிற்போக்கு விலங்குகள் எது வும் பூட்டப்படாமல் இயற்கையோடு இயைந்து, மனித வாழ்வோடும் உழைப்போ டும் பிணைந்து வளர்ந்துகொண்டே இருப்ப தால்தான் தமிழ் இன்னமும் நிலைத்து வளர் கிறது. ஆனால் இந்த உயர் தனிச் செம்மொழி யை வஞ்சிக்க ஒன்றிய ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிகள் கொஞ்சநஞ்சமல்ல. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாய் நிதி ஒதுக்கினார்கள். இதே போல செம்மொழி தமிழ் ஆண்டை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அப்போ தைய நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போதும் கூட சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மோடி அரசு ரூ.1487.9 கோடியை ஒதுக்கிவிட்டு தமிழுக்கு வெறும் ரூ.74.1 கோடி யை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதுதான் பழமையான, சமமான இருமொழிகளுக்கு வழங்குகிற சமநீதியா? தமிழ்நாட்டில் உட் கார்ந்து கொண்டு திருக்குறளுக்கு ஆன்மீக உரை எழுதும் ஆர்.என்.ரவி, தில்லி பட்டி னம் சென்று பேசத் தயாரா? ஆதிக்கம், அதிகாரம் ஆகியவற்றின் துணையோடு எந்தவொரு மொழியையும் பாது காக்கவும் முடியாது. வளர்க்கவும் முடியாது என்பதை ஆர்.என்.ரவி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ காலப் புயல்களை சந்தித்து காலத்தோடு சேர்ந்து வளரும் மொழி தமிழ். இந்தித் திணிப்பை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்த மண் தமிழ்நாடு. ஓய்வு நேரங்களில் அந்த வர லாற்றையும் கொஞ்சம் இங்கு வருகிற ஆளு நர்கள் படித்து வைத்துக் கொள்வது நல்லது. அப்படியே கொஞ்சம் நீட் உள்ளிட்ட நிலுவை யில் உள்ள மசோதாக்களையும் படித்து (!) ஒப்புதல் தருவது நல்லது.