states

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ‘சீல்’ வைக்கப்படுமா?

செய்தி : சீன நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு. நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு. ஆசிரியர் உட்பட 2 பேர்கைது. எதிர்க்கேள்வி ஏகாம்பரம் : பி.எம்.கேர்ஸ் நிதி - கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (2019 - 20, 2020-21, 2021-22) வெளிநாடுகளில் இருந்து ரூ.535.44 கோடி நிதியை பெற்றுள்ளது. இதில் சீனாவும் உள்ளது. அப்படியென்றால் பி.எம்.கேர்ஸ் நிதி - மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே! பிஎம்கேர்ஸ் நிதி - என்பது அரசு சார்புடையது அல்ல என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே கூறப்பட்டிருக்கிறது. அப்படி எனில் அது ஒரு  தனியார் அறக்கட்டளை. அதன் அலுவல் சாரா தலைவராக பிரதமர் நரேந்திர மோடி  உள்ளார். அதன் உறுப்பினர்களாக பாது காப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் அலுவல் சாரா டிரஸ்டிகள்.   அது பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரி விலக்கு உண்டு. சீனாவிடம் நன்கொடை பெற்றதற்காக பிஎம்கேர்ஸ் தலைவர், டிரஸ்டிகள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கலாம் தானே! அதன் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கலாம் தானே!