அகர்தலா, பிப்.7- திரிபுரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் சுதீப்ராய் பர்மன் மற்றும் 2 எம்எல்ஏ-க்கள் பாஜக-விலிருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை யும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இத்துடன், பாஜக-விலிருந்து வில கிய எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சுதீப் ராய் பர்மன், முன்னாள் முதல்வர் சமீர் ரஞ்சன் பர்மனின் மகன் ஆவார். காங்கிரசிலிருந்த இவர், திரிணா முல் காங்கிரசுக்கும், பின்னர் அங்கிருந்து பாஜக-வுக்கும் சென்றவர். 2018 திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியதால் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், ஓராண்டிலேயே அவரிடமிருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இத னால், அதிருப்தியிலேயே அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில்தான், சுதீப் ராய் பர்ம னும், ஆஷிஷ் சாஹா என்ற எம்எல்ஏ-வும் பாஜகவிலிருந்து விலகுவதாக அறி வித்து, தங்கள் எம்எல்ஏ பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் ரத்தன் சக்ர வர்த்தியை சந்தித்து அளித்துள்ளனர். 2023 துவக்கத்தில் திரிபுரா சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், சுதீப் ராய் பர்மனின் விலகல் பாஜக வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தனது விலகல் குறித்து சுதீப் ராய் பர்மன் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்துள்ளார். அதில், “திரிபுரா பாஜக அரசாங்கம், ஜனநாயகக் குரல்களை நசுக்குகிறது. முழுக்க முழுக்க தவறான ஆட்சி நடத்து கிறது. ஊடகங்கள் அச்சுறுத்தப்படு கின்றன.
தலைப்புச் செய்திகள்கூட முதல் வர் அலுவலகத்தால் கட்டளையிடப்படு கின்றன. இதனை நாங்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொண்டோம். உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நினைத் தோம். ஆனால், இனியும் ஒரு தனிமனி தனுக்கு (முதல்வர் பிப்லப் குமார் தேவ்) ‘ஆமாம் சாமி’ போட முடியாது என்று தற்போது வெளியேறி இருக்கிறோம். அரசை எதிர்த்துப் போராடவும், மாநி லத்தில் ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுக்கவும் இந்த முடிவை எடுத் துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சட்டமன்றத்தில், பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. தனிப்பெரும் பான்மைக்கு 31 எம்எல்ஏ-க்கள் தேவை என்ற நிலையில், அதைவிட 2 எம்எல்ஏக் களை மட்டுமே பாஜக தற்போது கூடு தலாக பெற்றுள்ளது.