புதுதில்லி, ஆக.6- எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’-வின் முக்கிய தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், உத்தரப்பிர தேசத்தில் இருந்து மக்களவைக்கு போட்டி யிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள புல்பூர் தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக குர்மி வாக்காளர்கள் உள்ளனர். நிதிஷ்குமாரின் கட்சியான ஜேடி(யு) நடத்திய சர்வேயில், அங்கு நிதிஷ் வெற்றி பெறுவது உறுதி என்பது மட்டுமின்றி, பாஜகவின் கோட்டையான கிழக்கு உ.பி.யில் மிகப்பெரிய மாற் றத்தை உருவாக்குவார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. உ.பி.யில் நிதிஷ் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வரவேற்பதாக சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜ் நகரின் பெரும்பகுதியை உள்ளடக்கிய தொகுதி யான புல்பூர், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னாள் பிரத மர்கள் ஜவஹர்லால் நேரு, வி.பி.சிங் ஆகி யோர் புல்பூரில் இருந்து நாடாளுமன்றத் துக்கு தேர்வு செய்யப்பட்டனர். பாஜகவின் கேசரி தேவி படேல் தற்போதைய எம்.பி. நிதிஷ் வேட்பாளராக வந்தால், கிழக்கு உ.பி.யில் குர்மிகள் உள்ளிட்ட ஓபிசி பிரி வினரை தங்களோடு வைத்திருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆதாயம் அடையும் என்று பாஜக கவலை கொண்டுள்ளது. ஓம்பிரகாஷ் ராஜ்பரின் செல்வாக்கு மிக்க சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை (SBSP) அவசர அவசரமாக தேசிய ஜனநா யகக் கூட்டணியில் சேர்த்ததே இதற்கு சாட்சி. முதல்வர் ஆதித்யநாத்தின் எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆக.31-ல் ‘இந்தியா’வின் மூன்றாவது சந்திப்பு
26 எதிர்க்கட்சிகளின் கூட்டணி ‘இந்தியா’-வின் மூன்றாவது கூட்டத்தை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பின ரின் வசதியை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.