states

வழக்கறிஞர் கருணா நந்தியும் இடம்பெற்றார்... உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரின் ‘டைம்ஸ்’ பட்டியலில் அதானி!

புதுதில்லி, மே 26- குறுகிய காலத்தில், இந்தியா வின் முதற்பெரும் பணக்காரராக மாறியிருப்பவர் கவுதம் அதானி.  இந்தியப் பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான அவர், உலகின் 100 பணக்காரர்களில் ஒருவராகக் கூட இருந்ததில்லை. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் உலகப் பணக்காரர் கள் பட்டியலில் 5-ஆவது இடத் திற்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில், 2022-ஆம் ஆண்  டில், உலக அளவில் செல்வாக்கு செலுத்திய 100 பேரின் (100 Most  Influential People of 2022) பட்டி யலை, ‘டைம்ஸ்’ (TIME MAGAZINE) பத்திரிகை திங்களன்று வெளியிட்ட நிலையில், அதிலும் அதானி இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி விளா டிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதி பதி விளாடிமிர் புடின், சீன ஜனாதி பதி ஜீ ஜின்பிங், ஐரோப்பிய ஆணை யத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், டென்னிஸ் வீரர் ரபேல் நடால், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் மற்றும் ஊடக அதி பர் ஓப்ரா வின்ப்ரே ஆகியோர் வரி சையில் இந்தியாவிலிருந்து புதி தாக கவுதம் அதானியும், வழக்கறி ஞர் கருணா நந்தியும் இடம்பெற் றுள்ளனர். “அதானியின் பிராந்திய வணி கம் இப்போது விமான நிலையங்  கள், தனியார் துறைமுகங்கள், சூரிய சக்தி மற்றும் அனல் மின்சாரம் மற்  றும் நுகர்வோர் பொருட்கள் என விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதானி குழுமம் இப்போது உலக பொருளாதாரத்தில் ஆறாவது பெரிய தேசிய பெஹிமோத் ஆக  உள்ளது. இருப்பினும் அதானி மக்  கள் பார்வையில் இருந்து விலகி  அமைதியாக தனது சாம்ராஜ் யத்தை கட்டமைத்துக் கொண்டிருக்  கிறார்” என்று ‘டைம்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், “கருணா நந்தி ஒரு  வழக்கறிஞர் மட்டுமல்லாமல், நீதி மன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் தனது குரலை திறமையாகவும் துணிச்சலாகவும் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு பொது ஆர்வலராக உள்ளார். மேலும், அவர் பெண்களின் உரி மைகளுக்காகப் போராடுபவர். பாலியல் வல்லுறவு தடுப்புச் சட்டங்  களின் சீர்குலைப்பு மற்றும் பணி யிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை எதிர்த்  துப் போராடி வருகிறார். அண்மை யில், திருமணத்தின் பெயரிலான பாலியல் வல்லுறவுக்கு தண்டனை யிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எதி ராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்” என்று ‘டைம்ஸ்’ பாராட்டியுள்ளது.