states

img

நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

புதுதில்லி, பிப். 9 - அதானி விவகாரத்தில் நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வியாழனன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதானி குழுமம், பங்குச் சந்தை  வர்த்தகத்தில் சுமார் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ நிறுவனம் கடந்த ஜனவரி 24 அன்று 106 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும  நிறுவனங்களின் சொத்து மதிப்பு  819 சதவிகிதம் அதிகரித்த நிலை யில், இந்த வளர்ச்சி நேர்மையானது அல்ல; அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு  மதிப்பு மோசடியாக உயர்த்திக் காட்டியுள்ளன. குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும் ஈடுபட்டுள்ளன” என்று  குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தது.

‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை பின்னணியில், அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி அள விற்கு சரிந்தது. அதானியின் தனிப் பட்ட சொத்து மதிப்பில் மட்டும் சுமார் 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. உலகின் 3-ஆவது பணக்காரராக இருந்தவர், 17-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால், இந்த இழப்பானது, அதானி குழுமத்திற்கு மட்டுமானதாக அல்லாமல், அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களையும் பாதித்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி (LIC) ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு  செய்திருந்தது. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு, கடந்த 10 நாட் களுக்கு முன்பு ரூ. 74 ஆயிரம் கோடி யாக இருந்தது. ஆனால், தற்போது அந்த சந்தை மதிப்பு ரூ. 43 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. எல்ஐசி-க்கு சுமார் ரூ. 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளன. இதில், அதானி இந்தியாவில் வாங்கியிருக்கும் கடன் களில் 90 சதவிகிதம், பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டவை. அதானி குழுமத்திற்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ. 22  ஆயிரம் கோடி, பஞ்சாப் நேசனல் வங்கி ரூ. 7 ஆயிரம் கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ. 7 ஆயிரம் என கடன்களை வழங்கி யுள்ள நிலையில், இந்த வங்கி களின் பங்கு மதிப்பு அடிவாங்கி யுள்ளது. இந்திய மக்களின் சேமிப்பி லிருந்து அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மக்களின் சேமிப்பு சூறை யாடப்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

இவ்வாறு அதானியால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியே ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய மக்களை ஏமாற்றியும், கொள்ளை யடித்துமே அதானி தனது சொத்து  மதிப்பை உயர்த்திக் கொண்டார் என்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வ றிக்கை குற்றம் சாட்டியிருப்பதாலும், அதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட 16  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் போராடி வருகின்றன. ஆனால், மோடி அரசு இப்போதுவரை அதுதொடர்பாக வாய்திறக்க மறுக்கிறது. இந்நிலையில், அதானி விவ காரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வியாழனன்று ஆம் ஆத்மி,  பாரத் ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்பிஐ  மற்றும் எல்ஐசி-யை பாதுகாக்க வேண்டும்; கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.