இலங்கை அரசு அதானி நிறுவ னத்துடன் ஏற்படுத்திய மின்கொள் முதல் ஒப்பந்தத்தை ரத்து செய் துள்ளதாக வெளியான செய்தியை அதானி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கை ஊடகங்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையி லான அமைச்சரவை, அதானி நிறு வனத்திடம் செய்யவுள்ள மின்சார கொள் முதல் ஒப்பந்தத்தை (மன்னார் மற்றும் பூனேரியில் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை) ரத்து செய்ய தீர்மா னித்துள்ளது என தெரிவித்திருந்தன. இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து முழு திட்டத்தையும் மறுபரி சீலனை செய்ய ஒரு குழுவை நியமித்துள் ளது எனவும் குறிப்பிட்டன. இந்நிலையில் அதானி குழும செய்தித் தொடர்பாளர், இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், இந்த செயல்முறையை மறுபரிசீலனை செய்வதற்கான இலங்கை அரசின் முடிவு “நிலையான மறுஆய்வு செயல்முறை யின் ஒரு பகுதி. இலங்கையின் பசுமை எரி சக்தி துறையில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வள ர்ச்சியை முன்னெடுப்பதற்கும் எங்கள் நிறு வனம் உறுதி கொண்டுள்ளது என்றார்.