புதுதில்லி, ஏப்.9- நாட்டு மக்களிடமிருந்து, மோடி அரசு 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை யிலான நிதியாண்டில் வசூலித்த ஒட்டு மொத்த வரிகள் 27 லட்சம் கோடி ரூபா யைத் தாண்டியுள்ளது. 2020 - 2021 நிதியாண்டில், நாட்டின் மொத்த வரி வசூல் 20 லட்சத்து 27 ஆயி ரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது ஒரே ஆண்டில் ரூ. 27 லட்சத்து 7 ஆயிரம் கோடியாக அதிகரித்து, 34 சத விகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. நிறுவன வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி வரி என பல்வேறு வரிகள் மூலம் இந்த நிதி யாண்டில் எவ்வளவு வசூல் செய்ய வேண் டும் என்று மோடி இலக்கு நிர்ணயித்தி ருந்ததோ, அதனைக் காட்டிலும் அதிக மாகவே தற்போது மக்களிடமிருந்து சுரண்டியுள்ளது.
அதாவது, 22 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு வரி வசூல் இருக்கும் என்று இலக்கு நிர்ண யித்திருந்த நிலையில், அதைவிடவும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக வசூலித்து, 27 லட்சத்து 7 ஆயிரம் கோடி யை மோடி அரசு வாரிச் சுருட்டியுள்ளது. இது கடந்த 23 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கான உச்சபட்ச வரி வரு வாய் என்று மத்திய வருவாய்த்துறைச் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித் துள்ளார். தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி, பெரு நிறுவன வரி ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி வரிகள் 14 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவிற்கு வசூலாகி யுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டி லும் 49 சதவிகிதம் அதிகம் ஆகும். மேலும், பட்ஜெட் இலக்கைக் காட்டிலும் 3 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதுபோலவே, மறைமுக வரி வசூலா னது கடந்த ஆண்டைக் காட்டிலும் 48 சத விகிதம் அதிகரித்துள்ளது.
பட்ஜெட்டில் 11 லட்சத்து 02 ஆயிரம் கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலை யில், அது தற்போது, 12 லட்சத்து 90 ஆயி ரம் கோடி ரூபாய் அளவிற்கு - 1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வசூ லாகியுள்ளது. இதேபோல மத்திய சரக்கு சேவை வரி உள்ளிட்ட வரி வகையும் 30 சதவிகி தம் அதிகரித்து, 6 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கலால் வரி மட்டும் மிகச்சிறிய அளவில் (0.2 சத விகிதம்) குறைந்து, 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள் ளது. இந்த ஒட்டுமொத்த வரி வசூலில் கவ னிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மறைமுக வரி வசூலை விட, நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது. கடந்த 1999-க்குப் பிறகு தற்போதுதான் ஜிடிபி மீதான வரி விகிதம் 11.7 சதவிகிதமாக அதிகரித் துள்ளது. இது கடந்த 2020 - 2021இல் 10.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.