புனே, மே 1- ஆஸ்கர் விருது பெற்ற இந்தி யாவின் ‘நம்பர் ஒன்’ திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகு மான், ஞாயிற்றுக்கிழமையன்று மகாராஷ்டிர மாநிலம் புனே வில் மிகப் பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை நடத்தி னார். இதில் ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். இதனி டையே இந்த மெகா இசைக் கச்சேரி பாதியிலேயே புனே போலீசாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள் ளது. ஒட்டுமொத்த கூட்டமே ரகுமானோடு இணைந்து பாடிக் கொண்டிருந்தபோது, இரவு 10 மணிக்கு திடீ ரென மேடை ஏறிய போலீசார் பாடக் கூடாது என்று தடா லடியாக உத்தரவிட்டு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். இசைக்கலைஞர்களையும் வழக்கு போடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் ஏ.ஆர். ரகுமான் எது வும் பேசாமல் அமைதியாக மேடையிலிருந்து இறங்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.