பெங்களூரு, மார்ச் 17- கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க பாஜக-வில் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே எனக்குத்தான் உனக்குத்தான் என்று பதவிக்காக அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். எந்தளவிற்கு என்றால், கர்நா டகாவில் பாஜக-வை உருவாக்கி ஆளும் கட்சியாக வளர்த்தவர்களில் முக்கியமான வரும், முன்னாள் முதல்வருமான எடியூரப் பாவையே காரை விட்டு இறங்க விடாமல் விரட்டியடிக்கும் அளவிற்கு கோஷ்டிப் பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. எடியூரப்பா தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அதனால், வர வுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை. எனினும், தான் வழக்கமாக போட்டியிடும் சிக்காரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்தார். ஆனால் கட்சித் தலைமை இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
ஆனால், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி. ரவி, “எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவு களை ஏற்க முடியாது” என பகிரங்கமாக கூறியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, கர்நாடக பாஜக-விற்குள் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சலசலப்பு அடங்குவதற்கு உள்ளாகவே, ‘விஜய் சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில், பாஜக நடத்திவரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க எடியூப்பா, வியாழனன்று சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே-வுக்குச் சென்றார். ஹெலி காப்டரில் பிஜிஎஸ் பள்ளியில் வந்திறங்கிய எடியூரப்பா, பின்னர் கார் மூலம் மூடிகெரே அய்யப்பசாமி கோயிலை நோக்கிப் புறப்பட்டார். அப்போது, கே.எம். ரோடு அருகே சி.டி. ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் காரை சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். எடியூரப்பாவை காரை விட்டே இறங்கவிடவில்லை. எடியூரப்பா வுக்கு எதிராகவும், மூடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ குமாரசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த எடியூ ரப்பா, பாஜக எம்எல்ஏ குமாரசாமியும் சொந்தக் கட்சியினராலேயே விரட்டிய டிக்கப்பட்டு, இருண்ட முகத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொ ள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறுவதும், அப்போது அங்கி ருந்த சி.டி. ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதும் கர்நா டக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கெனவே பாஜக-வில் எடியூரப்பா வுக்கும், வீட்டுவசதித் துறை அமைச்சர் சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதல் வெடித்தது. தற்போது சி.டி. ரவியோடும் எடியூரப்பா வுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் பேட்டி அளித்திருக்கும் எடியூரப்பா, “யாரும் யாரை யும் புறக்கணிக்க முடியாது. எங்களிடை யே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண் டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவ லைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள். அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத் சமுதாய வாக்குகள் தேவையில்லை என்று சி.டி. ரவி கருத்து கூறியிருந்தால் அது தவறு. அவரிடம் இதுபற்றி நான் பேசுவேன்” என்று தனது மகனுக்கு சீட் வழங்காவிட்டால், லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்காது என்றும் மறைமுகமாக மிரட்டி யுள்ளார்.