அந்தமான், ஏப்.9- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற் பட்ட நிலநடுக்கங்களால் மக் கள் அச்சமடைந்துள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிறன்று பிற்பகல் 1.16 மணிக்கு கேம்பல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற் பட்டது. இது 4.9 ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இதையடுத்து பிற்பகல் 2.59 மணிக்கு 4.1 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் 4.01 மணிக்கு நிகோபார் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதி வானது. நிலநடுக்கத்தால் எவ்வித பொருட்சேதங்களோ, உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும் நிலஅதிர்வுகள் ஏற்படுமா என ஒன்றிய அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.