states

img

தில்லியில் நான்குமாடி கட்டடம் இடிந்து விபத்து

வடக்கு தில்லியில் ஆசாத் சந்தையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் தில்லியில் உள்ள ஆசாத் சந்தையில் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுமானத்தில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்ததாகவும், மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கட்டட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;