திருவனந்தபுரம், அக்.20- கேரள தகவல் தொழில்நுட்பத் துறை யில் 67,000 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜ யன் தெரிவித்தார். 63 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறினார். ஐபிஎஸ் மென்பொருள் நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உல களாவிய முன்னணி நிறுவனமாக ஐபிஎஸ் உயர்ந்திருப்பது முதலீட்டிற்கு கேரளம் உகந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார். முதலீட்டாளர்களுக்கு கேர ளம் ஒரு சிறந்த வாய்ப்பு. சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள தொழில்களுக்கு அரசு அதிக முக்கி யத்துவம் அளித்து வருகிறது. ஆறு ஆண்டு களில் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 300இல் இருந்து 3900 ஆக அதிகரித்துள்ளது. 55 ஊழியர்களுடன் தனது செயல்பாடு களைத் தொடங்கிய ஐபிஎஸ் நிறுவனம், தற்போது 3,500க்கும் மேற்பட்ட ஊழியர் களுடன் உலக அளவில் வளர்ந்துள்ளது என்று முதல்வர் கூறினார். ஐபிஎஸ் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் வி.கே.மேத்யூஸ், முகேஷ் மேத்தா (பிளாக் ஸ்டோன்), அர்மின் மேயர் (பாய்டன்), டாக்டர். கோட்டல்மேன் (லுஃப்தான்சா கார்கோ) மற்றும் ஐபிஎஸ் முதன்மை அதிகாரி (சிஇஓ) ஆனந்த் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
சிறந்த ஆதரவு கிடைத்தது: வி.கே.மேத்யூஸ்
மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக ஐபிஎஸ் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் வி.கே. மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இ.கே.நாய னார், டெக்னோபார்க்கில் 25 ஆண்டு களுக்கு முன் ஐபிஎஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 25ஆவது ஆண்டு விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பதாக கூறினார். தற்போதைய உலகச் சூழல் கேரளா வுக்கு சாதகமாக உள்ளது. கேரளாவில் இருந்து செய்யும் வேலைகளுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும். மனித வளம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கேரளா முன்னணியில் உள்ளது. அமைதியான சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையும் சாதகமாக உள்ளது என்றும் மேத்யூஸ் கூறினார்.