states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் இந்திரயணி ஆறு பாய்கிறது. மாவல் பகுதியில் இந்த  ஆற்றின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி ஞாயிறன்று மதி யம் இடிந்து விழுந்து, ஆற்றில் அடித் துச்செல்லப்பட்டது. பாலத்தில் நின்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.  இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலை யில், 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட் டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என  ஆனது என ஞாயிறன்று இரவு வரை  தெரியவில்லை. தீயணைப்புப் படை யினர், தேசிய பேரிடர் மீட்புப் படை யினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக? மாவல் பகுதிக்கு அருகே குந்தமலா  பகுதி சிறியளவிலான ஒரு சுற்றுலா தளம் ஆகும். கடந்த சில நாட்களாக அப்  பகுதியில் தொடர் மழை பெய்து வரு வதால், ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெ டுத்துள்ளது. இதனால் சுற்றுலா வந்த மக்கள் இரும்புப் பாலத்தில் நின்று ஆற்  றில் பாய்ந்து வரும் தண்ணீரை வேடிக்கை பார்த்தனர். அப்பொழுது வெள்ளநீர் அதிகரித்து பாலம் உடைந்து விழுந்து சரிந்துள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் நின்று 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்களில் சுற்றுலாப்  பயணிகளும் இருக்கலாம் என முதற் கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது.

உ.பி.யில் மீண்டும்  அம்பேத்கர் சிலை உடைப்பு

வன்முறை சம்பவங்களின் கூடார மாக மாறி வரும் பாஜக ஆளும்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஒரு  அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மகா ராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா  கிராமத்தில் உள்ள பூங்காவில் அம்  பேத்கரின் சிலை உள்ளது. சனிக்கிழமை  அன்று இரவு மர்ம நபர்கள் அம்பேத்க ரின் சிலையை உடைத்துள்ளனர். இந்த  விஷயம் ஞாயிறன்று காலை தெரியவர  அமோதா கிராம மக்கள் பூங்கா அருகே கூடி போராட்டம் நடத்தினர். சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை விரை வில் கைது செய்வதாக உறுதியளித்து, காவல்துறை அதிகாரிகள் கிராமவாசி களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து அமோதா கிராம மக்கள் போராட்டதை வாபஸ் பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குக்லி காவல் நிலைய ஆய்வாளர் கவுரவ் சிங்  கூறுகையில்,”சட்டம் ஒழுங்கை பரா மரிக்க பூங்காவைச் சுற்றிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி  காட்சிகள் மூலம் மர்மநபர்களைக் கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என அவர் கூறினார். இந்த சம்பவத்தை போன்று கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சக்கோதர் கிரா மத்தின் பூங்காவில் அம்பேத்கரின் சிலை  உடைக்கப்பட்டது என்பது குறிப்பி டத்தக்கது.

கானாவில் சோகம் கோதாவரி ஆற்றில்  மூழ்கி 5 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பசாரா வில் கோதாவரி ஆறு பாய்கி றது. அப்பகுதியில் யாத்திரை மேற் கொண்டவர்கள் ஆற்றில் குளித்தனர். எதிர்பாராவிதமாக ஆற்றில் மூழ்கி 5 பேர்  உயிரிழந்தனர். ஒருவரை காப்பாற்ற 5 பேரும் நேரில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  என்றும், உடல்களை மீட்டு உடல்கூறா ய்வுக்காக உள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.