states

பிபிசி ஆவணப் படத்துக்கு தடை விதிப்பு: இந்தியர்களின் உரிமைகளை மீறுவதாகும்

புதுதில்லி, பிப்.4- பிபிசி ஆவணப்படத்தை தடுப்பது இந்தி யர்களின் உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டமான 2002-ஆம் ஆண்டு  நிகழ்ந்த கோத்ரா கலவரத்தில் நிகழ்ந்த  விரும்பத்தகாத சம்பவங்கள், கலவரத்தில்  மோடியின் நேரடி தொடர்பு உள்ளிட்டவை களை தொகுத்து உலகின் முன்னணி செய்தி  நிறுவனமான பிபிசி, “இந்தியா- மோடிக் கான கேள்விகள்” என்ற தலைப்பில் 2 பாகங்களைக் கொண்ட ஆவணப்படம் ஒன்றை ஜனவரி 3-ஆம் வாரத்தில் வெளி யிட்டது. 

ஆவணப்படத்தின் லிங்குகள்  மூத்த  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், திரிணாமுல்  எம்.பி. டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் மூலம், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி யதால், அதிர்ந்த ஒன்றிய மோடி அரசு தக வல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் விதி  16-இன் கீழ் அவசரகால தணிக்கை அதிகா ரங்கள் மூலம் யூடியூப், டுவிட்டர் பக்கங்க ளில் தங்களின் வீடியோ மற்றும் டுவீட்களை பயன்படுத்தி பிபிசி ஆவணப்பட இணைப்பு களை நீக்கியது.  பிபிசி ஆவணப்படத்திற்கான இந்திய ஒன்றிய அரசின் தடை சட்டவிரோதமானது என “இணைய சுதந்திர அறக்கட்டளை” (Internet Freedom Foundation) உள்ளிட்ட அமைப்புக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையான கண்ட னத்தை மோடி அரசுக்கு எதிராக தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், அர்ச்சிவ் இண்டர்நெட் (archive internet) மூலம்  பிபிசி ஆவணப்படம் தனிப்பட்ட டவுன் லோடாக பரவியது. கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் பொது இடங்கள் மற்றும் தனிப்  பட்ட கூட்டங்களில் ஒளிபரப்பு செய்தன.  இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய  வாலிபர் சங்கத்தினர் கல்லூரி, பல்கலைக்  கழகங்கள் பொது இடங்களில் ஒளிபரப்புச் செய்தனர். இடதுசாரி ஜனநாயக முன்னணி  ஆளும் கேரளாவை தவிர்த்து சில மாநி லங்களில் குறிப்பாக பாஜக ஆளாத தமிழ்  நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திரையிட்ட தற்காக வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை களை அரங்கேற்றின. 

இந்நிலையில், குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவ ணப்படத்தை ஒன்றிய பாஜக அரசு தணிக்கை செய்ததற்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் கல்வியா ளர்கள் என மொத்தம் அறிக்கையில் கையெ ழுத்திட்டுள்ள 522 பேர் கூட்டாக கூறி யிருப்பதாவது: “குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை நீக்குவது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைப்பதாகவும், சமூகம் மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை அணுகவும் விவாதிக்கவும் உள்ள இந்தியர்களின் உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது. ஆவணப்படம் திரையிடப்படுவதைத்  தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்கள் மேற் கொண்ட முயற்சிகள் கல்விச் சுதந்திரக் கொள்கைகளை மீறுவதாகவும் உள்ளது. 

ஒரு போதும் ஏற்க முடியாது

பல்கலைக்கழகங்கள் சமூக மற்றும் அரசியல் கேள்விகளில் திறந்த விவாதங் களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு ஜன நாயக சமூகத்தின் சரியான செயல்பாட் டிற்கு இத்தகைய விவாதங்கள் முக்கிய மானவை. அரசாங்கத்தை விமர்சிப்பதால், சில கருத்துக்களை வெளியிடுவதை பல்க லைக்கழகங்கள் தடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழ கம், தில்லி ஜாமியா மிலியா இஸ்லா மியா பல்கலைக்கழகம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்,  கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி பல்க லைக்கழகம் ஆகியவற்றில் ஆவணப் படத்தை திரையிட மாணவர்கள் முயன்ற னர். ஆனால் தடுக்கப்பட்டது. 

கேள்விகள் முக்கியமானவை

குஜராத் கலவரத்தை ஊக்குவிப்பதி லும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஒருபோதும் கணக்கில்  எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பது மட்டுமல்லாமல், இன்று நாட்டை துண்டாட அச்சுறுத்தும் வகுப்புவாத துருவ முனைப்பை மாற்றியமைக்க பிபிசி ஆவ ணப்படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்  முக்கியமானவை. பிபிசி ஆவணப்படம் பிரிட்டிஷ் ஸ்தாபனத்தின் ஒரு போர்வை அங்கீகாரமாக பார்க்கக்கூடாது” என அறிக் கையில் கையொப்பமிட்டவர்கள் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியுள்ளனர்.