states

img

கேரளாவில் கோர விபத்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி

கேரளம் மாவேலிக்கரை பகுதி யைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து மூலம் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினர். தேனி வழியாக இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே சென்று கொண்டு இருந்த பேருந்து பிரேக் பிடிக்காமல் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராம மோகன்(55), அருண் ஹரி (40), சங்கீதா(45), பிந்து  (50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்ட மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பேருந்து கேரள அரசுக்கு சொந்தமானது ஆகும்.