states

கோடை விடுமுறைக்கு 358 சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுதில்லி,ஏப்.4- கோடை விடுமுறையையொட்டி 358  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்  இந்த சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறை இயக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை விடுமுறையின்போது பொது மக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகை யிலும், வாரம் இருமுறை இயங்கும் வகையில் 350 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.  இந்த சிறப்பு ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களை  இணைக்கும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது.  பிற டிஎன் ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ளது. ரயில்களின் விவரம் இணை யத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.