states

img

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அளித்த தரவுகளின்படி, இந்தியாவில் 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும், 2021-ல் 127 புலிகளும் இறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை காரணங்களால் 69 புலிகளும், இயற்கைக்கு மாறான விதத்தில் 5 புலிகளும், வேட்டையாடப்பட்டு 29 புலிகளும், 30 புலிகள் மற்ற காரணங்களால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 197 புலிகளின் மரணம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த 3 ஆண்டுகளில் புலிகளின் தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;