states

img

48 மணி நேரத்தில் 31 பேர் பலி - நடுங்கும் மகாராஷ்டிரா

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவின் நான்டெட் நக ரில் உள்ள ஷங்கர் ராவ் சவான் அரசு மருத் துவமனையில் மருந் துப் பொருட்களின் பற்றாக்குறை கார ணமாக திங்களன்று ஒரே நாளில் 12 குழந்  தைகள் உள்பட 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் புதனன்று 2 பச்சி ளங்குழந்தைகள் உட்பட மேலும் 7 பேர்  உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை  உயரும் அபாயம் ஏற்கனவே மருந்துப் பொருட்களின்  பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்ட ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவ மனையில் மேலும் 142 குழந்தைகள் அவ சர சிகிச்சைப் பிரிவில் உள்ளன. அதில்  42 குழந்தைகளின் நிலை கவலைக்கிட மாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கண்டனம் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர்  உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசி யலில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி உள்ள நிலையில், “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.