states

232 பீரங்கி குண்டுகள் வனப்பகுதியில் கண்டெடுப்பு

சண்டிகர்,பிப்.26- வனப்பகுதியில் சாக்கு மூட்டைகளில்  232 பீரங்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஹரியானா மாநில மங்லோரா கிராம  வனப்பகுதியில் வெள்ளிக்கிழமையன்று பல சாக்கு மூட்டைகளில் இருந்த 232  துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரி வித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று அம்பாலா மற்றும் குருசேத்ரா  மாவட்டங்களில் சாஹா பகுதியில்  இருந்து  துருப்பிடித்த ஆறு வெடிமருந்து குண்டுகள்  கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்நிலையில், ஹரியானா மாநிலத் தின் அம்பாலாவின் மங்லோரா கிராம வனப் பகுதியில் பெக்னா ஆற்றில் வெவ்வேறு அளவுகளில் இருந்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெடி குண்டு செயலிழப்புப் படையினர் ஆய்வு செய்தனர்.  முதற்கட்ட விசாரணையில், “பல சாக்கு மூட்டைகளில் இருந்த 232 துருப்பிடித்த  பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள், மணல் சுவர் கட்டப்பட்டு, பீரங்கி  குண்டுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப் படும்,” என்று காவல்துறையினர் தெரிவித்த னர். வெடிபொருள் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த துருப்பிடித்த ராணுவ குண்டுகள் எந்தப் பிரி வுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்து விசா ரணை நடத்தி வருவதாகவும் எஸ்பி கூறி னார்.