states

img

16 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேரணி

அதானியின் ரூ. 17 லட்சம் கோடி ஊழல் குறித்து மோடி அரசு எப்போது விசாரணை நடத்தும்?

புதுதில்லி, மார்ச் 15 - அதானியின் ஊழல் குறித்து விசார ணை நடத்தக் கோரி, அமலாக்கத்துறை இயக்குநரிடம் மனு அளிக்கச் சென்ற  எதிர்க்கட்சித் தலைவர்களை மோடி  அரசு தடுத்து நிறுத்தியது. இரும்புத் தடுப்புக்களை அமைத்தும், ஆயிரக்கணக் கான போலீசாரைக் குவித்தும், பேரணி முன்னேறி விடாமல் அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளது. அதானி குழுமத்தின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச்சந்தை ஊழல்  குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புக்கள் விசார ணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தியும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஜனவரி 31 அன்று துவங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற்ற பட்ஜெட்  கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு களில் இப்பிரச்சனையை நாடாளு மன்றத்தில் கிளப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதானியின் ஊழல்  முறைகேட்டால், எல்ஐசி, எஸ்பிஐ போன்ற நாட்டின் பொதுத்துறை நிறு வனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. மோடி அரசு அதற்கு முன்வராத நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலும் காந்தி சிலை முன்பு, பல நாட்களாக எதிர்க் கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டன. ஆனால், நாடாளுமன்ற அலுவல்களே நடக்காவிட்டாலும் பரவாயில்லை; அதானியின் ஊழல் பற்றி மட்டும் பேச விடமாட்டோம் என்று மோடி அரசு பிடிவாதமாக இருந்து விட்டது.

தற்போது பட்ஜெட் கூட்டத் தொட ரின் இரண்டாவது கட்ட அமர்வுகள் மார்ச் 13 அன்று துவங்கிய நிலையில், இந்த அமர்வுகளிலாவது அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்; கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை வைத்தன.  ஆனால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களோ, காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி லண்டனில் பேசும் போது இந்திய நாட்டை அவமதித்து விட்டார்; அதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று  உப்புக்குச் சப்பில்லாத பிரச்சனை யைக் கிளப்பி அமளியில் ஈடுபட்ட னர். அதானி விவகாரத்தைத் திசைத் திருப்புவதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்தனர். இந்நிலையில், புதனன்று காலை 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த  தலைவர்கள், நாடாளுமன்ற மாநி லங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் கூடி  ஆலோசனை நடத்தினர். அதில்,  ஆளும் பாஜக-வினர் நாடாளுமன்றத் தை முடக்கி உண்மையை மூடி மறைக்க திட்டமிடும் முயற்சியை முறி யடிக்கவும், அதானியின் ஊழல் விவ காரத்தை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவும் தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், ஹிண்டன் பர்க் ரிசர்ச் அறிக்கை அடிப்படையி லான அதானியின் ஊழல் முறைகேடு கள் குறித்து விசாரணை நடத்துமாறு பேரணி செல்வதென்றும், அதன் நிறைவில் அமலாக்கத்துறை இயக்கு நரகத்தில் மனு அளிக்கவும் முடிவு செய்தனர்.

அதன்படி, 16 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நண்பகல் 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், இந்தப் பேரணியை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்ட மோடி அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப் பித்ததுடன், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் காவல்துறையைப் பயன் படுத்தி, விஜய் சவுக் அருகில் இரும்புத் தடுப்புக்களை வைத்து  எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேரணி யைத் தடுத்து நிறுத்தியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இதற்குமேல் பேரணியாகச் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் மூலம் மிரட்ட லிலும் இறங்கியது. இதனால் ஆவேச மடைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்,

தில்லி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே, “அதானி குழுமம் பல லட்சம் கோடி அளவிற்கு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மனு அளிக்கவே நாங்கள் பேரணி சென்றோம். ஆனால், தில்லி போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். நாங்கள் 200 பேர் மட்டுமே பேரணியாக சென்ற நிலையில், 2 ஆயிரம் போலீ சாரைக் குவித்து எங்களை தடுத்துள்ள னர். அமைதியாக நடக்கும் பேரணி யை அனுமதிப்பதில் ஒன்றிய அர சுக்கு என்ன பிரச்சனை? இப்படி, ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க விரும்பும் இவர்கள்தான் ஜனநாய கத்தை பற்றி பேசுகின்றனர். எனினும், எதிர்க்கட்சிகள் குழுவானது, விரைவில் அமலாக்கத்துறை இயக்கு நரைச் சந்தித்து புகார் அளிப்போம்’’ என்று தெரிவித்தார். அதானி ஊழலை அம லாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, ஆம்  ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம்  லீம், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற் றனர். திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

ஜனநாயகக் கொலையை அரங்கேற்றுகிறது பாஜக!

“அதானி ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி, அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கு பாஜகவும் மோடி அரசும் முட்டுக்கட்டை போடுவதுடன், விவாதம் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் சீர்குலைக்கிறது. இது ஜனநாயகத்தின் பகல் கொலை. பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-இன் படி அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரத்து 422 வழக்குகளில், மூன்றில் 2 பங்கு வழக்குகள் மோடி ஆட்சியில் போடப்பட்டுள்ளன. அதாவது 3 ஆயிரத்து 555 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசால் பதிவு செய்யப்பட்ட இந்த 3 ஆயிரத்து 555 வழக்குகளில் வெறும் 23 பேர் மட்டுமே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமலாக்கத்துறையானது எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதற்கும், தங்களுக்கு அடிபணியுமாறு அவர்களை அச்சுறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. முக்கியமாக பாஜக-வில் சேர முடிவு செய்பவர்கள் மீதான வழக்குகள் மட்டும் மறைந்து விடுவது எப்படி? எனவே, இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.