சத்தீஸ்கர் மாநிலம் கம்ஹாரியா கிராமத்தில் விவசாயிகளை இடமாற்றம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராகவும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தென் கிழக்கு நிலக்கரி லிமிடெட் (SECL) நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், கம்ஹாரியா கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் நடைபயண பேரணியாக சென்று கோர்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.