states

img

மாமேதை மார்க்ஸ் 140வது நினைவு தினம்

மார்ச் 14 -மாமேதை காரல் மார்க்ஸ் நினைவுதினம் 1818 மே 5 அன்று பிறந்த காரல் மார்க்ஸ் தனது 64வது வயதில் 1883ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று மறைந்தார்.  இதுவரை உலகில் தோன்றிய தத்துவ மேதைகளில் மார்க்ஸ் தனித்துவமான மேதையாக திகழ்கிறார். அவருடைய சிந்தனைகள் இன்றளவும் ஜீவஒளி வீசுவதாக அமைந்துள்ளது. முதலாளித்துவம் மூச்சுத்திணறி முட்டுச்சந்துக்குள் மாட்டிக்கொண்டு விழிக்கும் இந்த நாட்களில் மார்க்ஸ் உலகமக்களால் மீண்டும் மீண்டும் நினைக்கப்படுகிறார். 

மனிதகுலத்தின் விடியலாய் மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பது காலை வெளிச்சம்போல மேலும் மேலும் தெளிவாகி வருகிறது.  மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று ஊளையிட்டவர்கள் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றனர். இந்திய மக்களின் பிரச்சனைகளுக்கும் மார்க்சியமே உறுதியான, இறுதியான தீர்வாகும்.  மாமேதை மார்க்ஸை நினைவுகூர்வது என்பது மார்க்சியத்தின் மீதான பற்றுறுதியை உறுதிசெய்வதாகும்.  இந்த ஆண்டு மார்க்ஸ் நினைவு தினமான மார்ச் 14 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் அவரது உருவப்படத்தை வைத்து மரியாதை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)