புதுதில்லி, டிச. 21 - இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் நாளொ ன்றுக்கு 115 கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில் இத்தகவலை தெரிவித்துள்ளார். 2021-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் தினக் கூலித் தொழிலாளர்கள் மட்டும் 42 ஆயிரத்து 004 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். அதாவது நாளொன்றுக்கு 115 தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நாளொ ன்றுக்கு 63 பேர் விகிதம், ஓராண்டில் 23 ஆயி ரத்து 179 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், சுய தொழில் புரிந்த 20 ஆயிரத்து 231 பேரும், சம்பளத்து க்குப் பணியாற்றிய 15 ஆயிரத்து 870 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2021-இல் வேலையில்லாதவர்கள் மட்டும் 13 ஆயிரத்து 714 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் தவிர, 13 ஆயி ரத்து 089 மாணவர்கள், 12 ஆயிரத்து 055 வியா பாரிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற் றிய ஊழியர்கள் 11 ஆயிரத்து 431 பேர் தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளனர். விவசாயத் துறையில் 10 ஆயிரத்து 881 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில், 5 ஆயிரத்து 563 பேர் விவசாயத் தொழிலாளர்கள், 5 ஆயிரத்து 318 பேர் விவ சாயிகள். இந்த விவசாயிகளிலும் நிலமுள்ள விவசாயிகள் 4 ஆயிரத்து 806 பேர் உயிரை விட்டுள்ளனர். குத்தகை நிலத்தில் விவசாயம் பார்த்த விவசாயிகள் 512 பேர் உயிரை இழந்துள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.