states

‘2022 இந்திய பொருளாதாரத்திற்கு சிறந்த ஆண்டா?’

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுதில்லி, டிச.27- ‘2022 இந்திய பொருளாதா ரத்திற்கு சிறந்த ஆண்டு’ என்று பிர தமர் நரேந்திர மோடி, ‘மனத்தின்  குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.  இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், புதுதில்லியில் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்துள் ளார். அப்போது 2022 மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளதாக வும், நாட்டின் பொருளாதாரத்திற்  கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண் டாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிய கவுரவ் வல்லப், “பட்டினி குறி யீட்டில் இந்தியா 107-வது இடத்  தில் உள்ளது. அதாவது, ஆப்  கானிஸ்தானைவிட ஒரு இடம் தான் நாம் முன்னணியில் இருக்கி றோம். 2022-இல் ஆசியாவி லேயே இந்திய ரூபாய் மதிப்பு  மிகப் பெரிய வீழ்ச்சியை சந்  தித்துள்ளது. வேலைவாய்ப் பின்மையைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத  மிக மோசமான நிலையில் நாம்  இருக்கிறோம். கடந்த 10 மாதங்க ளில் பணவீக்கம் 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. பால்  விலை ஓராண்டில் 5 மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல்,  டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந் துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோதும், இந்தியாவில் எரிபொருளின் விலை குறைய வில்லை. இந்திய ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருகிறது.  இதன் காரணமாக வர்த்தக பற்  றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது, நாடு  பொருளாதார ரீதியில் நல்ல நிலை யில் இருப்பதாக பிரதமர் மோடி யால் எவ்வாறு கூற முடிகிறது.  இன்னும் எவ்வளவு காலத்திற்குத்  தான் கொரோனா, உக்ரைன் போன்ற  பிரச்சனைகளுக்குப் பின்னால்  நீங்கள் ஒளிந்துகொண்டிருப்பீர் கள்?” என கேள்வி எழுப்பியுள் ளார்.