மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோ ரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தேர்தல் தேதி திங்க ளன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வரு கின்றன. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநி லத்திற்கான ஏபிபி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் செவ்வா யன்று வெளியிடப்பட்டது. அதில் மத்தி யப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கியிருக்கும் என்றும், பாஜக ஆட்சியை இழக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மொத்த முள்ள 230 தொகுதிகளில் பெரும்பான் மைக்கு 116 தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 113 முதல் 125 தொகுதி வரை கைப்பற்றும் என்றும், ஆளும் பாஜக 104 முதல் 116 தொகுதியை வெல்லும் என்றும், பகுஜன் சமாஜ் 0 முதல் 2 தொகுதி வரையிலும், மற்றவைகள் 3 தொகுதி வரை கைப்பற்றும் என ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப் பட்டுள்ளது.