புதுதில்லி, மார்ச் 3- பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தையும், பல்வேறு தில்லுமுல்லுகளையும் செய்து மிகச் சிறு அளவிலான பெரும்பான்மை யுடன் திரிபுரா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்ட மன்றத்தில், பாஜக கூட்டணி 2018இல் பெற்றிருந்த இடங்களுடன் ஒப்பிடும்போது இப்போது ஒரு சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக் கிறது. முன்பு இந்தக் கூட்டணி 44 இடங்களைப் பெற்றிருந்தது. இப்போது அதற்கு 33 இடங்களே கிடைத்திருக்கின்றன. இந்தச் சிறிய பெரும்பான்மைக்கு கூட, பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை வாரி இறைத்தது, பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டது. இதனையெல்லாம் மீறி, பாஜகவை நிராகரித்து இடது முன்னணிக்கும்; மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறது. பாஜகவினால் கடந்த ஐந்தாண்டு காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளை தீரத்துடன் எதிர்த்துச் சமர்புரிந்து வந்த இடது முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லாயிரக்கணக்கான முன்னணி ஊழியர் களுக்கு அரசியல் தலைமைக்குழு தன் வாழ்த்துக் களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன்களைப் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணி யும் புதுத்தெம்புடன் பணிபுரியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)