states

திரிபுராவில் அமித்ஷா ரகசிய கூட்டம்

நடவடிக்கை கோரி சீத்தாராம் யெச்சூரி புகார்

புதுதில்லி, பிப்.15- திரிபுரா தேர்தல் அதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரகசியக் கூட்டம் நடத்தியது ஏன் என்றும் தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலான இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி தலைமைத்தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செய லாளர் ஜிதேந்திர சௌத்ரி தலைமைத்தேர்தல் ஆணை யருக்கு முகவரியிட்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். சீத்தாராம் யெச்சூரி, அதனைத் தலைமைத் தேர்தல் ஆணை யருக்கு  அனுப்பியிருப்பதுடன், இவ்வாறு கோரியுள்ளார்.  அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:  நாட்டின் உள்துறை அமைச்சர், திரிபுரா சட்டமன்றத் தேர்தலை நடத்துவதில் நேரடியாகவே செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் நடவடிக்கையானது மிகவும் மோசமான ஓர் அம்சமாகும். நமக்கிடையே நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது, திரிபுரா  சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் சம்பந்தப்படும் சாத்தியக்கூறுகள் குறித்து எங்களது சந்தேகங்களை தங்களிடம் வெளிப்படுத்தி யதைத் தங்களுக்கு நினைவுகூர்கிறோம். திரிபுராவில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நீங்கள் எங்களிடம் உறுதி அளித்தீர்கள். எனினும், நீங்கள் இவ்வாறு உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், உள்துறை அமைச்ச ரின் தலையீடு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி  இருக்கின்றன. இது தேர்தல் நடத்தை விதியை மீறும் செய லாகும் என்பது தெளிவு. எனவே தாங்கள் உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம். மேலும் தாங்கள் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு  அழைப்பாளர்கள் மூலம் உள்துறை அமைச்சரைச் சந்தித்திடும் முக்கியமான தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.