வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிருஷ்யமுக், ஜோலைபாரி மற்றும் முஹுரிபூர் பகுதிகளில் முன்னாள் முதல்வரும், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இரவு-பகல் பாராமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு, பால், உடைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர்.