திரிபுராவில் 21 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த 30 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உணவு ஒவ்வாமையால், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் 16 பேர் ராஜீவ் காந்தி நினைவு மருத்துவமனையிலும், 5 பேர் மாவட்ட ஐந்து பேர் மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட சுகாதார அதிகாரிகள் குழு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.