- சீனாவைச் சேர்ந்த பிர பல சமூக வலைதள நிறு வனமான “டிக் டாக் (TIK TOK)” இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து ஊழி யர்களையும் (40 பேர்) பணிநீக்கம் செய்துள்ளது. அனுமதி கிடைத்தாலும் இனி இந்தியாவில் மீண் டும் செயல்படும் திட்டம் இல்லை என “டிக் டாக்” அறிவித்துள்ளது.
- இடைத்தேர்தல் நடை பெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாது காப்பை உறுதிப்படுத்த மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் துப் பாக்கி ஏந்திய அணி வகுப்பு நடத்தினர்.
- சேலம் மாவட்டத்தில் உள்ள 9 கோயில்களுக்கு சொந்தமான சொத்து களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
- தில்லி விமான நிலையத் தில் ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி ஆவ ணங்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் சிஐஎஸ்எப் போலீசார் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கள் சிஐஎஸ்எப் அதிகாரி யான ஹரி கிஷனுக்கு சம்பவ இடத்திலேயே ரூ.3 லட்சம் லஞ்சம் வழங்க முன்வந்ததால் விசாரணை இன்றி சிறையில்அடைப்பு.