states

பாலிடெக்னிக் மாணவர்கள் அண்ணா பல்கலை.யில் 2 ஆம் ஆண்டு சேரலாம்

சென்னை,ஏப்.13- பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம் என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.13) நடந்த  கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல், “மதுராந்தகம் தொகுதி விவசாயிகள் நிறைந்ததா கும். இங்குள்ள மாணவர்கள் அதிகமான கட்டணம் செலுத்தி  தனியார் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அச்சிறுப்பாக்கம் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி  அமைக்க அரசு முன்வருமா” என்றார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன் முடி, “தமிழகத்தைப் பொருத்தவரையில் மொத்தம் 51 அரசு  பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் குகள் 34, அரசின் இணைவு பெற்ற கல்லூரிகள் 40 இருக் கின்றன. சுயநிதிக் கல்லூரிகள் 406 உள்பட மொத்தம் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன. அத்தோடு, பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியி யல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம். ஆனால்  அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சேர்க்கை நிறுத் திவைக்கப் பட்டிருந்தது. இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் படித்தவர்கள் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேரமுடியும்” என்றார்.