states

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மறுத்த ஆளுநருக்கு பெண்கள் கடும் கண்டனம்

சென்னை,மார்ச் 9- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட  விளையாட்டுக்களை தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தவைர் எஸ். வாலாண்டினா, பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி  உள்ளிட்ட இணைய விளையாட்டுக் களில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண் டும் என்று சமூக ஆர்வலர்களும் பெண் கள் அமைப்புகளும் தொடர் கோரிக் கைகளை வைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை  தடை  செய்வதற்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. 5 மாதங்களை கடந்த  நிலையில், அதன் மீது ஆளுநர் எவ்வித  முடிவும் எடுக்காமல் தற்போது தமிழ் நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது கடும் கண்டனத்திற் குரியது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களிலுள்ள இளைஞர்கள் முதல் படித்த பட்டதாரி இளைஞர்கள் வரை ஆன்லைன் ரம்மி விளை யாட்டால் பெரும் பணத்தை இழந்து தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.  பெண்களும் பலர் இந்த விளையாட்டில்  இணைந்துள்ளனர். பெரும் பணத்தை யும் இழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில், இந்த சூதாட்டத் திற்கு எதிராக பொதுமக்களை சந்தித்து  அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் ஒரு லட்சம் கையெ ழுத்துக்களை பெற்று ஆளுநரை சந்திக்க பலமுறை முயற்சித்தும் ஆளுநர் அலுவலகத்தில்  எந்தவித  பதிலும் வரவில்லை. மக்களை பெரி தும் பாதிக்கும் சூதாட்ட விவகாரத் தில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப் பளிக்காமல் சட்ட மசோதாவை திருப்பி  அனுப்பிய ஆளுநருக்கு கடும்  கண்டனங்களை தெரிவித்துக்கொள்கி றோம். மேலும், மக்கள் உயிரை குடிக் கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டம் நடத்த பாமக கோரிக்கை தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை  செய்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரை வுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்  ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பியுள்ள விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள  அறிக்கையில்.  ஆன்லைன்  சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆளுநர்  அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.  ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20 ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன் வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.