states

img

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை (நவ.22) செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.